கொல்கத்தா, ஏப்.20- திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு டன் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் நடத்தப்பட்ட ஜார்கிராமில் செங் கொடியுடன் துணிச்சலான அணி வகுப்பு நடத்தி வருகிறார் இடது முன்னணி வேட்பாளர் ஸோனா மணி முர்மு.
ஜார்கிராம் கடந்த 15 ஆண்டுக ளில் ஏராளமான சிபிஎம் தியாகி களைக் கண்ட பூமி. இடது முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்ட நகர்வுகளைத் தொடங்கிய பகுதி இது. இங்கு, திரிணாமுல் பயங்கர வாதத்தை முறியடித்து, மக்கள வைத் தேர்தலில், இடது முன்னணி வலுவான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
ஜார்கிராம் பட்டியல் பழங்கு டியினர் தனித் தொகுதியாகும். இங்கு இடது முன்னணி வேட்பா ளராக ஸோனா மணி முர்மு போட்டி யிடுகிறார். இவர் ஒரு பொதுநல ஊழி யரும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பா ளருமாவார் (ஜாக்கி). சந்தால், பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக பேசும் ஸோனா மணி பழங்குடியினர் மற்றும் பழங்குடி யினர் அல்லாதவர்களிடையே மிகவும் பிரபலமானவர். பல உரி மைப் போராட்டங்களில் பங்கேற்ற வர்.
மே 25ஆம் தேதி தேர்தல் நடை பெறும் ஜார்கிராமில் இடது முன்னணி வலுவான மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது. போட்டியாளர்களாக பாஜக வின் பிரநாத் துத்தே, டிஎம்சி-யின் காளி பாத சோரன் உள்ளனர்.